Friday, 25 August 2017

உம் அன்பே போதும் என் தேவா

உம் அன்பே போதும் என் தேவா
நீரின்றி நானில்லை தேவா தேவா

யாரென்னை கைவிட்டாலும்
நீர் என்னை காத்து கொள்வீர்
யாரென்னை வெறுத்தாலும்
நீர் என்னை அணைத்து கொள்வீர்
உம் அன்பே ஒன்றே போதும் என் தேவா
மண்ணில் நானும் வாழும் வரை

பாவத்தால் பிரிந்திருந்தேன்
உம் பாசத்தால் அணைத்து கொண்டீர்
பாவியாய் வாழ்ந்த என்னை
உம் பிள்ளையாய் மாற்றி விட்டீர்
என் அன்னை நீரே தந்தை நீரே

உயிரை தந்த இயேசு நீரே

No comments: